சென்னை: மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது குறித்து புகார் வந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை ஈடுபட்டனர். பூவிருந்தவல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் காவல்துறை, தீயணைப்பு துறை உதவியுடன் நிலம் மீட்கப்பட்டது.