மதுரை : மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய ஆய்வு எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.