மதுரை: மதுரை அருகே ரயில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து ஏற்பட்டிருப்பதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தீ விபத்து நடந்த ரயில் பெட்டியில் 3 சமையல் சிலிண்டர்கள் வைத்திருந்ததால் தீ மளமளவென பரவியுள்ளது. ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.