இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளிக்குடி காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த உயிரிழந்த 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே நேற்று மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் லாரி ஒன்று வேகமாக வந்து அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.