மதுரை: மதுரையில் பூச்சி மருந்து, உரக்கடைகளில் அதிகாரிகளின் ஆய்வு நடத்தி வருகின்றனர். மதுரையில் எலி கொல்லி மருந்து எளிதாக கிடைப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 12 குழுக்களை அமைத்து ‘ரேட்டால்’ எலி பேஸ்ட் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. வேளாண் தரக்கட்டு அதிகாரி சக்தி கணேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.