மதுரை: மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 25ம் தேதி இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து இருக்கைகளுக்கு தீ வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மணிகண்டன், வசந்தகுமார், யோகராஜ், திலீபன்ராஜ் ஆகியோரை மேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.