மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தாவணி காய்கறி, மலர் சந்தையில் வாகன நிறுத்தம், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.