மதுரை : மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.558 லிருந்து ரூ.594 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியத்தை அக்.1 முதல் வழங்க மதுரை மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் விடுப்பின்றி 89 நாட்கள் பணிக்கு வந்த பின் ஒருநாள் விடுத்து பணி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.