மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஹெலிகாப்டரில் சென்னை பயணம்

அவனியாபுரம்: மதுரை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானம் பெறப்பட்ட இதயம், மார்பக எலும்புகள் ஹெலிகாப்டர் மூலம் சென்னை அனுப்பப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரணன் என்ற நோயாளி மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்பை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதையடுத்து வீரணனின் இதயம் மற்றும் மார்பக எலும்புகள் சென்னை தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!