மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்

சென்னை: 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், அரசு துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும், போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், வரும் 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மதுரை பழங்காநத்தம் எம்ஜிஆர் திடலில் ஜெயலலிதா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூறியுள்ளார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு