மதுரை: மதுரை மாவட்ட திருமங்கலம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். திருமங்கலம் அருகே அளப்பளச்சேரி கிராமத்தை சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
அனுமந்த் இளையப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் கருப்பசாமி அளப்பளச்சேரியை சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் சிலர் நள்ளிரவில் இடையப்பட்டி கண்மாய் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது தூக்கி வீசப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் அவர்கள் முயல் வேட்டைக்கு செல்லவில்லை என்று உறவினர்கள் மறுத்தனர். 12ம் வகுப்பு மாணவர் அனுமந்த் இளைஞர் கருப்பசாமி ஆகிய இரண்டு பேரே உயிரிழந்தவர்கள் ஆவர் காயமடைந்த மனோஜ் குமார் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.