மதுரை: மேலூர் அருகே மில்கேட் பகுதியில் செந்தில் என்பவர் வீட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 55 சவரன் நகை ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.