அதற்கென நூறு ஆடுகள், 5,000 கிலோ அரிசி போன்றவை பக்தர்களிடமிருந்து நேர்த்தி கடனாக பெறப்பட்டு சமையல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நள்ளிரவில் நடைபெற்ற சமையலுக்கு பிறகு கரும்பாறை முத்தையாவுக்கு படையலிட்ட பிறகு அதிகாலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 6,000 ஆண்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டு சுவைத்தனர். இந்த விருந்தில் சாதி, மத பேதமில்லாமல் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.