மதுரை: மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் உயிரிழந்தார். பாலசுப்ரமணியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.