மதுரை: மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாக பிரச்சனையில் பள்ளி தாளாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை திருப்தி அளிக்கிறது. நிர்வாக பிரச்சனையின் காரணமாகவே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளியின் தாளாளருக்கு முன்ஜாமின் வழங்கியதுடன், வழக்கு பதிவில் தாமதம் குறித்து தல்லாகுளம் போலீஸ் உதவி ஆணையர் ஆஜராகி விளக்கம் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.