மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற போதிய அளவில் பேட்டரி வாகனங்களை இயக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.