மதுரை: மதுரையில் பட்டாசு வெடித்து கண்ணில் பட்டாசு துகள் பட்டதில் முதியவருக்கு பார்வை பறிபோனதாக புகார் அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி பேரையூர் ரோடு அருகே தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் வெடித்த பட்டாசு கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது. பட்டாசு துகள் பட்டு காயமடைந்த வி.பெருமாள்பட்டியை சேர்ந்த முதியவர் முத்தையாவுக்கு பார்வை பறிபோனது.