மதுரை: மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்வு ஆணையத்தின் பதிவாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டதுடன். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.