மதுரை: மதுரை மாநாட்டிற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தேவரின கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வரக் கூடாது என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தேவர் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.