மதுரை: அருணகிரிநாதரால் மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய 293வது ஆதீனத்தை எனது வழக்கில் பிரதிவாதியாக சேர்ந்த விசாரணை நீதிபதி உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி நித்தியானந்தா ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு குறித்து மதுரை ஆதீனம், அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.