இந்த ஆலையை மீண்டும் இயக்க கோரி ஆலை ஊழியர்கள், கரும்பு விவசாயிகள் என பலரும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி ஆலையில் இருந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், தடுப்பையும் மீறி மதுரை நோக்கி அவர்கள் புறப்பட்டதால் பதற்றமும், பரபரப்பும் உருவானது.