மதுரை: மதுரை திருமங்கலம் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. திருமங்கலம் விருதுநகர் நான்குவழிச்சாலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டி (48), சிவ ஆத்மிகா (8), கனகவேல் (61), கிருஷ்ணகுமாரி (58), நாகஜோதி (45), சிவஸ்ரீ ஆகியோர் பலியாகினர்.