சென்னை: பரோலில் தப்பினார் என்பதற்காக, 21 ஆண்டு சிறை அனுபவித்த கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ரவியை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 2003ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவி, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.