பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஆதரிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கழக நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகள்தோறும் கல்வெட்டு மற்றும் கொடிக்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.