உத்திரமேரூரில் மதிமுக செயற்குழு கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக சார்பில், காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கான அவசர செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கலைவாணி மாரிமுத்து, தயாளன், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கன்னியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஆதரிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கழக நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகள்தோறும் கல்வெட்டு மற்றும் கொடிக்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்