இந்த அலுவலகத்திற்கு மதுராந்தகம் பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். அதில், பெரும்பாலானோர் பெண் ஆசிரியைகள் ஆவர். இதனால் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ளதால் இந்த வட்டார கல்வி அலுவலகம் முன்பாக மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. எனவே, அடிப்படை வசதி இன்றி பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.