வெறிநாய் கடிக்கு 4வயது சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே 4வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயரிழந்தான். கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிர்மலை வெறிநாய் கடித்தது. ரேபிஸ் நோய் தாக்கிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்தான். சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் இரவில் வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது

Related posts

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!