மெஷினில் சிக்கி கை விரல்கள் துண்டிப்பு: உரிமையாளர் மீது போலீசில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌத்திரி மகன் சுஜித்(26). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை 9.40 மணியளவில் கட்டிங் மெஷினில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரது வலது கை மெஷினில் மாட்டிக் கொண்டதால் வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவை துண்டாகிவிட்டது.

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக பணி அமர்த்தியதால் விபத்து ஏற்பட்டதாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது சுஜித் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!