ஜபால்பூர்: கர்நாடாக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் பஜ்ரங்தகளம் மீது தடை செய்வது உட்பட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. இதற்கு பஜ்ரங் தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் மீது பஜ்ரங் தள ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தற்போது தாக்குதல் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.