சென்னை: சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை ஆணையர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.