சொகுசு பங்களா, சொகுசு காரில் வலம் வந்து பகட்டான வாழ்க்கை வாழ்வதாக வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான இவர்களின் நிஜ பின்னணி கொடூரமாக இருந்துள்ளது. மில்லர் தற்கொலை செய்யும் போது அவருக்கு ரூ.280 கோடி கடன் இருந்திருக்கிறது. வங்கியில் வெறும் ரூ.6 லட்சம் மட்டுமே வைத்திருக்கிறார். அவரது சொத்துக்கள் எல்லாமே வங்கி அடமானத்தில் இருந்ததால் கடன் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இந்த ரகசிய கடன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்போது மில்லரின் மனைவி கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.