வியாபாரத்தை முடித்து திரும்பும்போது மீதித் தொகையை அவர் கொடுத்து விடுவார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மஜீத் மீன் வியாபாரத்திற்கு செல்லும்போது வழக்கம்போல ரூ.10 அட்வான்ஸ் கொடுத்து 5 பிப்டி பிப்டி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். வியாபாரத்தை முடித்த பின்னர் பாக்கித் தொகை ரூ.240ஐ அவர் கடைக்காரரிடம் கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் மஜீத் வாங்கிய எப் எக்ஸ் 492775 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி விழுந்தது. அதே எண்ணுடைய வேறு வேறு தொடரில் உள்ள 4 டிக்கெட்டுகளுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.8 ஆயிரமும் கிடைத்தது. கடந்த 20 வருடங்களாக லாட்டரி வாங்கும் தனக்கு பலமுறை சிறிய, சிறிய பரிசு கிடைத்திருந்த போதிலும் பெரும் தொகை பரிசாக கிடைப்பது இதுவே முதல் முறை என்று மஜீத் கூறினார்.