அதற்காக, விஜயவாடாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த சனிக்கிழமை பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், வீட்டின் உயரத்தை அதிகரிக்க அதன் அடிப்பகுதியில் ஹைட்ராலிக் ஜாக்கிகள் பொருத்தப்பட்டு ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென சில ஜாக்கிகள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஜாக்கி மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடு எதிர்பாராத விதமாக பக்கத்து கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதுகுறித்து ஐதராபாத் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு, கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ள வீட்டை முற்றிலும் இடிக்க முடிவு செய்தனர். அதைதொடர்ந்து, நேற்று காலை வீட்டை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.