மகளின் காதல் திருமணத்தால் வேதனை கழிவறைக்குள் கழுத்தறுத்து தந்தை தற்கொலை


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனையடைந்த தந்தை கழிவறைக்குள் கழுத்தறுத்து தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (50). சவுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ரூபா. இந்த தம்பதியின் மகள் (19) ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டுச் சென்று காதலித்த வாலிபரையே திருமணம் செய்து கொண்டார்.

இந்த விவரம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுந்தர், சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். தனது ஒரே மகள் இப்படி தங்களின் விருப்பமில்லாமல் காதல் திருமணம் செய்துவிட்டாரே என மனவேதனையடைந்தார். எனக்கு வாழவே பிடிக்கவில்லை என மனைவி ரூபாவிடம் அடிக்கடி கூறுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு சுந்தர் வீட்டின் கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வெளியேவரவில்லை. சந்தேகமடைந்த ரூபா, கழிவறையின் கதவை தட்டினார். ஆனால், திறக்கப்படவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் சுந்தர் சுயநினைவின்றி கிடந்தள்ளார். உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது சுந்தர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகளின் காதல் திருமணம் பிடிக்காதது தான் சுந்தர் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அன்லிமிடெட் சப்பாத்தி – அன்லிமிடெட் டேஸ்ட்!

உணவும் உலக நாடுகளும்!

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!