மேலும் முத்தையா தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரது மனைவி மணியாவுடன் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்தார். இந்நிலையில், மணியாளும் அவரை விட்டு பிரிந்து செல்லவே அவரை கண்டுபிடித்து தருமாறு நேற்று முன்தினம் காவல் நிலையம் வந்துள்ளார். 2வது நாளாக அதுகுறித்து கேட்பதற்காக நேற்று குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்தார். திடீரென காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர், காவல் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முத்தையாவிற்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.