மதுரை: காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தையின் ஜாமீன்மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கிருத்திகாவின் தந்தை நவீன் படேலின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் கிருத்திகா ஆஜராகவில்லை என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கில் முக்கிய நபரான நவீனுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறிவிட்டு போலீஸ் விசாரணைக்கு இளம்பெண் ஆஜராகாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.