டெல்லி: தொலைந்த செல்போனை கண்டுபிடிப்பதற்காக ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிம் கார்டுகள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் செல்போன்களை முடக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் நடவடிக்கை எடுத்துள்ளது.