தலித்துகளை தாங்குவது போன்று பிரதமர் பேசுகிறார். 1980ல் ஜெகஜீவன் ராம் பிரதமர் என்ற போது எதிர்த்து வாக்களித்தவர்கள் தான் பாஜவினர். சாதியை தூண்டி வாக்கு பெறும் தரம் தாழ்ந்த அரசியல் தமிழகத்தில் எடுபடாது. இது பெரியார் பூமி. பாஜவில் மண்டல தலைவர், மாவட்ட, மாநில, தேசிய தலைவர் தொடர்ந்து இரண்டு முறை வரக்கூடாது என்பது அக்கட்சியின் சட்டம். வட்டார தலைவரே இரண்டு முறை வரக்கூடாது என்றால் பிரதமராக மோடியை மட்டும் 3வது முறையாக போட்டியிட அனுமதிக்கலாமா?. ஒரே நாடு ஒரே இந்தியா என ஒரே தேர்தலுக்கு வழி வகுக்கிறார்கள். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் ஒன்றிய அரசுக்கு தேர்தல் நடத்த வேண்டும். அப்போதெல்லாம் இந்தியா முழுவதும் தேர்தல் நடக்குமா? முட்டாள்தனமாக தெரியவில்லையா?. தேர்தல் பத்திரம் என்கிற லஞ்சம் பெறும் கேடு கெட்ட திட்டத்தில் மொத்த வசூலில் பாஜவுக்கு மட்டும் ரூ.3,077 ேகாடி கிடைத்துள்ளது. இந்த கேடு கெட்ட ஆட்சியை தூக்கி எறிவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.