மேலும் 3 குழந்தைகள் உள்பட 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிகிச்சை பெற்று வந்த விமல்குமாரின் 4 மாத பெண் குழந்தையும் கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி டிரைவரான பென்னாகரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.