லாரியில் தீப்பிடித்து டிரைவர் கருகி பலி

ஓட்டப்பிடாரம்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்ற வெள்ளையன் (38). ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து டிப்பர் லாரியில் தார் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் கம்பெனியில் லாரியை நிறுத்திவிட்டு லாரிக்குள் தூங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரியில் தூங்கிய ராதாகிருஷ்ணன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

Related posts

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்