ஒவ்வொரு பெட்டியிலும் தலா 25 கிலோ வெடிபொருட்கள் என மொத்தம் 2.50 டன் வெடிபொருட்கள் இருந்தன. இதையடுத்து, லாரி டிரைவர் இளையராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ‘லாரியை பென்னாகரத்தில் இருந்து கோவைக்கு கொண்டு செல்வதாகவும், அதில் வெடிபொருட்கள் இருப்பது தனக்கு தெரியாது’ என்று கூறினார்.
ஆனால், இந்த பிடிபட்ட வெடி பொருட்கள், பென்னாகரத்தில் அரசு அனுமதி பெற்ற வெடிபொருள் குடோனில் இருந்து தான், ஏற்றி வந்தது என்று தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வெடி பொருட்கள் இருந்த லாரியை மாநகர துப்பாக்கி சுடும் மையத்திற்கு பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர்.