பின்னர் இருவரும் வள்ளியூர் திரும்பி கொண்டிருந்தனர். நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன் நான்குவழிச் சாலையில் எதிரே கேரளவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில் சாலமன், மதுமிதா இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவரான திருச்சூரைச் சேர்ந்த சேர்மன் (37) என்பவரை கைது செய்தனர்.