சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்று சொன்னவர்கள் யாரும் சந்திரபாபு கைது செய்யப்பட்டதில் சொல்ல முன்வரவில்லை. இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்திரபாபு. எனவே அவரை தவிர்த்து வேறு யாரை கைது செய்வது? ஒரு சாதாரண மனிதன் ஊழல் செய்தால் என்ன தண்டனையோ சந்திரபாபு போன்றவருக்கும் அதே தண்டனை கிடைக்கும். இல்லாத நிறுவனம் இருப்பது போல் போலி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. திறன்மேம்பாட்டு மோசடியில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்ததில், அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்தாலும், அதிகாரிகளுக்கு பதவியில் இருந்த சந்திரபாபு அழுத்தம் கொடுத்து கையெழுத்து போட வைத்து நிதி திருடப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர் பேசினார்.