வரும் 6ம் தேதி வரை மொரீனா, குவாலியர், குணா, ராஜ்கர், ஷாஜாபூர், உஜ்ஜைன், தார், ரத்லம் ஆகிய மாவட்டங்களில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, மீண்டும் ராஜஸ்தானுக்குள் நுழைகிறார். முன்னதாக 5 நாட்கள் யாத்திரை இடைவெளி விட்டதற்கு காரணம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி சென்றார். கடந்த மாதம் 27, 28ம் தேதிகளில் மாணவர்களிடையே உரையாடினார். தற்போது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு டெல்லி திரும்பினார். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ராகுல் காந்தி மீண்டும் மத்திய பிரதேசத்தில் இன்று யாத்திரையை தொடங்குகிறார்.