இதுபோன்ற சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை நடத்த திட்டமிட்டு அதற்கான அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர், ப.சிதம்பரம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மேற்கண்ட இரு தினங்களில் டெல்லியில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மேலும் இதற்காக பொறுப்பாளாராக நியமனம் செய்யபட்ட ஆஜய்குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடக்கிறது. இதில், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுடன்தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.