சென்னை: மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் இடங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தங்களது இடங்களில் ஒன்று அல்லது 2 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.