சென்னை: மக்களவை தேர்தலுக்கான அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் சேர்ந்தால் பாமகவின் 5 எம்எல்ஏக்களும் சேர்த்து அதிமுக கூட்டணியில் 67 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். பாமக, தேமுதிக என இரு கட்சிகளும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை உள்ளது.