இந்நிலையில் ஒன்றிய நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தோட்டக்கலை இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘17வது மக்களவையில் ஒன்றிய அமைச்சர்களாக இருந்து, தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், 17வது மக்களவையில் எம்பிக்களாக இருந்து தற்போதைய தேர்தலில் தோற்றவர்கள், தேர்தலில் போட்டியிடாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கபட்டு இருந்த அரசு பங்களாக்களை ஜூலை 5ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ஆர்கே சிங், மகேந்திர நாத் பாண்டே, ஸ்மிருதி இரானி, அர்ஜுன் முண்டா, சஞ்சீவ் பலியான், ராஜீவ் சந்திரசேகர், கைலாஷ் சவுத்ரி, அஜய் மிஸ்ரா தேனி, வி.முரளீதரன், நிஷித் பிரமானிக், சுபாஷ் சர்க்கார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, ராவ்சாஹேப் தன்வே, ராவ்சாஹேப் கான்த்வே ஆகிய 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு பங்களாவை வரும் ஜூலை 11ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.