மக்களவை தேர்தல்: திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கிறது..!!

மதுரை: திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கிறது. மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துகளை கேட்டு வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கும் சூழலில் திமுகவின் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது.

ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கும் நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பயணத்தை தொடங்கியது. ஏற்கனவே தூத்துக்குடி, நாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மதுரையில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மதுரையில் பொதுமக்களை சந்தித்து, திமுக தேர்தல் அறிக்கை குழு கருத்துகளை கேட்டு வருகிறது.

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. தொழில் துறையினர், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பிப். 8ல் தஞ்சாவூரிலும், பிப்.9ல் சேலத்திலும், பிப். 10ல் கோவையிலும், பிப்.11ல் திருப்பூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் நடத்தவுள்ளது. தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கி சென்னையில் பிப்ரவரி 23ம் தேதி நிறைவு செய்கிறது.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்