மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மருத்துவர் கைலைராஜன்; திருநெல்வேலி தொகுதிக்கு சத்தியா; நாகர்கோவில் தொகுதிக்கு மரிய ஜெனிபர் வேட்பாளர்களாக அறிவிக்கபப்ட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். தென்காசி தொகுதிக்கு மயிலை ராஜண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி