சபாநாயகர் பதவியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பம் ஆகும். ஆகவே 3 கட்சிகளும் ஒரு பதவிக்கு குறிவைப்பதால் சபாநாயகர் யார் என முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஸ்வரியை சபாநாயகராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் ஆதரவு இன்றி பா.ஜ.க. அரசு தொடர முடியாது என்பதால் சபாநாயகர் பதவியை பெறுவதில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர். கட்சிகளில் பிளவு ஏற்பட்டு எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கும்போது முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும் என்பதால் அப்பதவிக்கு 2 கட்சிகளும் குறிவைத்துள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பா.ஜ.க. முயற்சித்ததாக ஏற்கனவே நிதிஷ்குமார் கூறியிருந்தார். ஆகவே கட்சியை உடைக்க மீண்டும் அதுபோன்ற முயற்சி நடைபெறாமல் தடுக்க சபாநாயகர் பதவியை நிதிஷ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டபோது எது உண்மையான கட்சி என்று? சபாநாயகரே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.